Saturday 4th of May 2024 12:16:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை: நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதாவுல்லா!

அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை: நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதாவுல்லா!


இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அணிந்து சென்ற ஆடைகுறித்து ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா நாடாளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்துக்கு வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அத்தாவுல்லா அணிந்திருந்த உடை, எந்த வகையிலும் நாடாளுமன்ற கலாசாரத்துக்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, சட்டப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.

இதைக் கவனத்தில்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உடனடியாக பொருத்தமற்ற உடையை மாற்றிவிட்டு சபைக்குள் வரும்படி அதாவுல்லாவுக்குப் பணித்தார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, சபையிலிருந்து வெளியேறி நாடாளுமன்ற கலாசாரத்துக்குப் பாதிப்பு அல்லாத ஆடையை அணிந்து மீண்டும் சபைக்குள் பிரவேசித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE